சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு வருகிற ஜூலை 23 தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யபடும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தெறிவித்துள்ளது. அன்றைய தினம் குற்றஞ்சாட்டப்பட்ட ஆ. ராசா உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
ஏழு ஆண்டுகள் விசாரணைக்குப்பின் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ் குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி என நான்கு நபர்கள் மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக கடந்த 2023 ஆம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் குற்றம் சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்துள்ளது.பின்னர் இந்த வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆ.ராசா தரப்பில் மனு ஒன்று கடந்த ஆண்டு தாக்கல் செய்யபட்டது. தனது வருமான வரி கணக்கு தாக்கல் விபரம் வழக்கின் சில ஆவணங்கள் வழங்க வேண்டும் என கோரினார்.
இதற்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கபட்டது. ராஜாவின் வருமான வரி கணக்கு தொடர்பான விபரங்கள் அவரிடமே இருக்கும் சாட்சி விசாரணையின் போது அதனை அவர் சரி பார்க்கலாம் என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு தீர்ப்பை தள்ளிவைத்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி என். வெங்கட வரதன் இன்று உத்தரவிட்டார். அதில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்த விபரங்களை கோரிய ராஜா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பின்னர் வழக்கில் ஜூலை 23 தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்த நீதிபதி அன்றைய தினம் ஆ.ராசா உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.