மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு இபிஎஸ் ஆதரவாளர் கே.பி. முனுசாமி ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி, தன்னை கொளத்தூர் தொகுதி மாவட்ட செயலாளராக நியமிக்க கே.பி. முனுசாமி ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிவித்தார்.
இதையும் படிக்க : முதலமைச்சரிடம் மனு அளிக்க குவிந்த பொதுமக்கள்...அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின்!
மேலும் முன் தொகையாக 50 லட்சம் ரூபாய் அவரது மகனை அனுப்பி பெற்றுக்கொண்டதாகவும் கட்சியில் பல்வேறு உறுப்பினர்களிடம் கே.பி.முனுசாமி லஞ்சம் பெற்றதாகவும் தெரிவித்தார்.
எனவே, ஓபிஎஸ் குறித்து பேசுவதற்கு கே.பி. முனுசாமிக்கு தகுதி இல்லை என தெரிவித்த கிருஷ்ணமூர்த்தி, இதோடு நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் வீடியோவையும் வெளியிடுவேன் என ஈபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமிக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.