ilayaraja synphony latest press meet news Admin
தமிழ்நாடு

உலகம் மகிழ்ந்த இசையின் திருநாள்! - இயக்குனர் பேரரசு பேட்டி

தமிழகத்திலும் சிம்போனி நிகழ்ச்சியை நடத்தணும் அதுதான் எனக்கு மகிழ்ச்சி..

Anbarasan

இன்றைக்கு தமிழக மக்களுக்கு திருநாள் அல்லது பண்டிகை என்று சொல்லலாம். ஏனென்றால் இசைஞானி இளையராஜா லண்டன் சென்று சிம்பொனி இசை கச்சேரியை நடத்தி இருக்கிறார்.

இளையராஜாவை வரவேற்பதில் எனக்கு ஒரு பெருமை.

சாதாரண கிராமத்தில் இருந்து வந்து கிராமப்புற பாடல்கள் எல்லாம் பாடி அதன் பிறகு தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்தார்.இந்தியாவிலே இசை என்றால் அது இளையராஜா என்று பேச வைத்தவர்

லண்டனின் இசையமைத்திருக்கிறார், பல நாடுகளுக்கு சென்று இசை அமைக்க காத்திருக்கிறார், தமிழன் இசைக்காக பல நாடுகளே காத்திருக்கும் பொழுது அப்போது தமிழகம் காத்திருக்கும் , தமிழனும் காத்திருப்பான். இளையராஜா தெரிவித்து இருக்கிறார் தமிழகத்திலும் சிம்போனி நிகழ்ச்சியை நடத்தணும் அதுதான் எனக்கு மகிழ்ச்சி என்று இளையராஜா தெரிவித்து இருக்கிறார்.

இளையராஜா இன்றைக்கு இந்தியாவின் ராஜாவாக உயர்ந்து இருக்கிறார்.

தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் உலகத்திற்கும் பெருமை தான்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்