ஆசிய கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனைகள் உலக சாதனை படைத்தனர். ஆசிய கோப்பை வில்வித்தை போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் 21 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் காம்பவுண்ட் பிரிவில் சாக்சி, தீப்சிகா, பிரகதி ஆகியோர் அடங்கிய இந்திய வீராங்கனைகள் 2 ஆயிரத்து 76 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்தனர்.
இதற்கு முன் 2 ஆயிரத்து 75 புள்ளிகள் பெற்றதே உலக சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை இந்திய மகளிர் அணியினர் முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அமித்ஷா வருகை : ஆத்திரமடைந்த பாஜகவினர்...! நடந்தது என்ன...?
சிங்கப்பூரில் நடைபெற்ற இந்த தொடரில் மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் இந்தியா 232-234 என்ற கணக்கில் கொரியாவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. ஆடவருக்கான காம்பவுண்ட் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய அணி 235-238 என்ற கணக்கில் கொரியாவிடம் வீழ்ந்தது.
மகளிருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய அணி 3-5 என்ற கணக்கில் கொரியாவிடம் தோல்வி கண்டது. அதேவேளையில் ஆடவருக்கான அணிகள் பிரிவில் இந்தியா 1-5 என்ற கணக்கில் சீனாவிடம் தோல்வியை சந்தித்தது.
ஆடவருக்கான தனிநபர் ரீகர்வ் பிரிவு இறுதிப் போட்டியின் இந்தியாவின் பார்த் சலுங்கே 2-6 என்ற கணக்கில் சீனாவின் ஜியாங்ஸுவிடம் தோல்வி அடைந்து வெளிப் பதக்கம் பெற்றார். மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ருமா பிஸ்வாஸ் 2-6 என்ற கணக்கில் சீனாவின் அன் குயிஸுவானிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இந்தத் தொடரில் இந்தியா 6 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்துடன் 5-வது இடம் பிடித்து நிறைவு செய்தது.
இதையும் படிக்க | கர்நாடகாவில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை இன்று தொடக்கம்......!