கொரோனா தொற்று காரணமாகத 10 மற்றும் பிளஸ் டூ மாணவ, மாணவியருக்கான பொது தேர்வை தமிழக அரசு ரத்து செய்து ஆல் பாஸ் என அறிவித்தது. இதை .தொடர்ந்து அவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டது.
அரசு அறிவித்த திட்டத்தின் படி மதிபெண்கள் குறைவாக உள்ளதாக கருதுவோர் தனியாக தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் பிளஸ் டூ துணைத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இன்று முதல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.
மேலும் ஆகஸ்டு 6ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் துணை தேர்வுகள் நடைபெறும் என்றும் அதே போல் தனித்தேர்வு எழுதுவோருக்கும் இதே தேதியில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வு மாணவர்கள் துணைத்தேர்வுக்கு என தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை.
மேலும் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் குறிப்பிட்ட பாடத்திற்கு என விண்ணப்பிக்க முடியாது எனவும் கட்டாயமாக அனைத்து பாடத்திற்கும் தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும். எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக அரசு தேர்வுத்துறை சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தற்போது எழுத உள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானதாக கருதப்படும் எனவும் அரசுத்தேர்வு இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.