தமிழ்நாடு

50 மீட்டர் தொலைவிற்கு உள்வாங்கிய கடல் நீர்... ராமேஸ்வரத்தில் மீனவர்கள் அச்சம்...

ராமேஸ்வரத்தில் துறைமுக கடற்கரையில்  50 மீட்டர் தொலைவிற்கு கடல்நீர் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

கனமழை எச்சரிக்கையை யடுத்தும்  ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன்,  உள்ளிட்ட தென்கடல்  பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது.  இதையடுத்து ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில்,  இந்தநிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் திடீரென 50 மீட்டர் தொலைவில் கடல் உள்வாங்கியுள்ளது. இதனால் கரைப்பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருந்த நாட்டு படகுகள் அனைத்தும் தரை தட்டி நிற்கின்றன.