accident 
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கோர விபத்து - உடல் பாகங்கள் சாலையில் சிதறி கிடந்த கொடூரம்

சங்கராபுரம் அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி விபத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழப்பு: உடல் உறுப்புகள் மற்றும் உடல் பாகங்கள் சாலையில் சிதறி கிடந்ததால் காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது கொடூரமான கோர விபத்து..

Anbarasan

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மேலேறி ஏரிக்கரை அருகே அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கக்கூடிய மூதாட்டி சாலையை கடக்க முற்பட்டபோது சாலை விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்து உள்ளார் இந்த சம்பவம் ஆனது அதிகாலையில் நடந்திருக்கும் என கூறப்படுகிறது குறிப்பாக உடல் நசுங்கி உடல் உறுப்புகள் உடல் பாகங்கள் அனைத்தும் தனித்தனியே சாலையில் சிதறி கிடந்தன இதனால் அப்பகுதியில் சாலையில் கடக்கும் என்ற வாகன ஓட்டிகள் அதனைப் பார்த்து அச்சத்துடன் பதைபதைக்கு சென்று வருகின்றனர் மேலும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சங்கராபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர் விபத்தில் சிக்கிய மூதாட்டி யார் என்பது குறித்து சங்கராபுரம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மூதாட்டி சாலையை கடக்கும் போது கோர விபத்து ஏற்பட்டு உடல் உறுப்புகள் உடல் பாகங்கள் அனைத்தும் தனித்தனியே சாலையில் சிதறி கிடந்ததால் அப்பகுதி சென்ற வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அனைவரையும் இந்த கோர விபத்து பதைபதைக்க வைத்துள்ளது.....