vijay vs thirumavalavan  
தமிழ்நாடு

“ரஜினி தவிர்த்த இடத்தில் விஜய் போய் சிக்கிக்கொண்டார்” - ஆரோக்கியமற்ற அரசியல் என திருமா சொன்னது இதைத்தான்..!

இறந்தவர்களை தூக்கிச் சென்றுகொண்டிருப்பதை பார்த்த பிறகு பாடிக் கொண்டுள்ளார் விஜய். தமிழக மக்கள் ...

மாலை முரசு செய்தி குழு

'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) தலைவர் நடிகர் விஜய் தலைமையில் கரூர் வேலாயுதம்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், தற்போது தமிழக அரசியலில் மட்டுமின்றி, கட்சியின் நிர்வாக மற்றும் சட்டரீதியான எதிர்காலத்திலும் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. இந்த வழக்கில் காவல்துறையின் குற்றச்சாட்டுகள் மற்றும் நீதிமன்றத்தின் கேள்விகள் அனைத்தும் தவெக-விற்கும் அதன் தலைவர் விஜய்க்கும் எதிராகத் திரும்பியுள்ள நிலையில், இந்தக் கடுமையான சட்ட நெருக்கடியில் இருந்து மீள, நடிகர் விஜய் நேரடியாக டெல்லியில் உள்ள தேசியத் தலைமையின் உதவியை நாட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்.."தமிழ்நாடு அரசு முறையாக இயங்கவில்லை எனக் குற்றம்சாட்ட முயற்சிப்பது, 41 பேர் பலியானது பிரச்சனை இல்லை, இதனை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வதில்தான் விஜய் குறியாக இருக்கிறார் என்பதை காண அதிர்ச்சியாக இருக்கிறது.

அதற்காக துளியும் வருத்தப்படுவதாகவும், களங்குவதாகவும், குற்ற உணர்வு இருப்பதாகவும் தெரியவில்லை. கொஞ்சம்கூட கவலைப்படாமல், ஆட்சியாளர்கள் மீது பழிபோடுவது அவர் எவ்வளவு ஆபத்தானவர் அல்லது ஆபத்தானவர்களின் கைகளில் சிக்கியுள்ளார் என்பது கவலை அளிக்கிறது. இதுபோன்ற சக்திகளிடம் தமிழக மக்கள் சிக்கிக் கொண்டால், எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.

இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறையின் மெத்தனம் அதிர்ச்சி அளிக்கிறது. புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு இருக்கும்

இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறையின் மெத்தனம் அதிர்ச்சி அளிக்கிறது. புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு இருக்கும் முகாந்திரம் விஜய்க்கு இல்லையா? செயல் திட்டங்களை வகுக்கும் அருண் ராஜ், ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு செய்யப்படாதது ஏன்?

தமிழக அரசு, தமிழக காவல்துறை அச்சப்படுகிறதா? காவல்துறையின் இந்த அணுகுமுறை ஏற்புடையது அல்ல.

இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்கள், அலட்சியமானவர்கள், வேண்டுமென்றே தாமதமாக வந்தவர்கள் என்ற வரிசையில் விஜய்யும்தான் வருகிறார். அவர் மீது வழக்குப்பதிவு செய்வதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? என்ன அச்சம்? கொள்கை எதிரி எனக் கூறிய பிறகு, பாஜக முட்டுக்கொடுப்பது ஏன்? கொள்கை எதிரி என்று பாஜக சொல்லிக் கொடுத்ததை விஜய் சொல்கிறார்? இதுபோன்று தமிழகத்தில் பலரை இறக்கிவிட்டுள்ளனர். விசிக இருக்கும்வரை தமிழகத்தில் இதுபோன்ற சூது, சூழ்ச்சிகளை செய்ய முடியாது.

தமிழ்நாடு அரசு முறையாக இயங்கவில்லை எனக் குற்றம்சாட்ட முயற்சிப்பது, 41 பேர் பலியானது பிரச்னை இல்லை, இதனை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வதில்தான் விஜய் குறியாக இருக்கிறார் என்பதை காண அதிர்ச்சியாக இருக்கிறது.

அதற்காக துளியும் வருத்தப்படுவதாகவும், குற்ற உணர்வு இருப்பதாகவும் தெரியவில்லை. கொஞ்சம்கூட கவலைப்படாமல், ஆட்சியாளர்கள் மீது பழிபோடுவது அவர் எவ்வளவு ஆபத்தானவர் அல்லது ஆபத்தானவர்களின் கைகளில் சிக்கியுள்ளார் என்பது கவலை அளிக்கிறது. இதுபோன்ற சக்திகளிடம் தமிழக மக்கள் சிக்கிக் கொண்டால், எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறையின் மெத்தனம் அதிர்ச்சி அளிக்கிறது.

சுயமாக செய்திருந்தால் இதுபோன்ற தவறுகளை விஜய் செய்திருக்க மாட்டார். நிர்மல் குமார், அருண் ராஜ் உள்ளிட்டோர் பாஜகவால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள். ஆர்எஸ்எஸ் பின்னணியில் இயங்கும் விஜய்யின் அரசியல் தமிழகத்தில் எடுபடாது. தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்.

விஜய் பேசியக்கூடிய அரசியல் என்பது கருத்தியல் சார்ந்தது கிடையாது. திமுக வெறுப்பு மட்டுமே அவரது அரசியல். அவரின் உரை உணர்ச்சியையும் ஆத்திரத்தையும் தூண்டக் கூடியதாக இருக்கிறது. அஞ்சலை அம்மாள், காமராஜர், அண்ணா, அம்பேத்கர் போன்றவர்களைப் பற்றி அவர் பேசி இருக்கிறாரா?

இயக்குநராக பாஜக கூறுவதை விஜய் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு பகுதியினர் அவரின் பின்னால் போவதால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது. திமுகவை பலவீனப்படுத்த முடியுமே தவிர ஆட்சியைப் பிடிக்க முடியாது.

இயக்குநராக பாஜக கூறுவதை விஜய் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு பகுதியினர் அவரின் பின்னால் போவதால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது. திமுகவை பலவீனப்படுத்த முடியுமே தவிர ஆட்சியைப் பிடிக்க முடியாது.

குறைந்தபட்ச இரக்க உணர்வே இல்லையென்றால் எப்படி? சிதம்பர விவகாரத்தில் நான் கதறி கதறி அழுதுள்ளேன். பல நாள்கள் தூக்கத்தை இழந்துள்ளேன். இறந்தவர்களை தூக்கிச் சென்றுகொண்டிருப்பதை பார்த்த பிறகு பாடிக் கொண்டுள்ளார் விஜய். தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்." என பேசியிருந்தார். 

இவரின் இந்த, கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சூழலில், இந்த சம்பவம் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் அரசியல் விமர்சகர் ராஜ கம்பீரனிடம் 

திருமாவளவன் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அப்போது பேசிய அவர், “விஜய் -க்கு அரசியலில் அனுபவம் கிடையாது, அரசியலில் தேர்ந்த அனுபவசாலிகளை மதிக்கவும் தெரியாது, ஆனால் ரஜினி அப்படி இல்லை, அவர் அரசியலுக்கு தீர்க்கமாக வர முடிவெடுத்த பின்னர், களம் தனக்கு சாதகமாக இல்லை என்பதை புரிந்துகொண்டார், அப்போதுதான் பாஜக அவரை இயக்குகிறது என்ற பேச்சு அடிபட்டபோது, ‘எனக்கும் வள்ளுவருக்கும்  காவிச்சாயம் பூசாதீர்கள்’ என பேசியிருப்பார். வள்ளுவரும் நானும் தப்பிச்சிட்டோம் என்பதை போல பேசியிருக்கிறார், இதை எதற்கு திருமாவளவன் மேற்கோள் காட்டியிருக்கிறார், என்றால் மிகப்பெரிய ரசிகர் வட்டாரம், ஈர்ப்பு கொண்ட நடிகரான ரஜினி தவிர்த்த இடத்தில விஜய் வந்து மாட்டிக்கொண்டுவிட்டார். ஒரு பெரும் கூட நெரிசலில் சிக்கி 41 -பேர் உயிரிழந்ததற்கு கொஞ்சம் கூட வறுத்த தெரிவிக்காமல், ஏறத்தாழ 3 நாள் கழித்து ஒரு வீடியோ போட்டுள்ளார். அந்த வீடியோவும், இரங்கல் தெரிவிக்கும் விதமாக இல்லமால், சினிமா டைலாக் போல பேசிவிட்டு சென்றிருக்கிறார். இந்த அறமற்ற இடத்தைத்தான் ததிருமாவளவன் சாடுகிறார்’ என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.