நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியதால் உயிர் பயத்துடன் மீனவர்கள் கரை திரும்பினர்.
வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 4 பேர், அஞ்சலையம்மாள் என்பவருக்கு சொந்தமான படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்கும் தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடல் கொள்ளையர்கள் 3 பேர், நமது மீனவர்களை கத்தியால் தாக்கியதுடன், சுமார் 3 லட்சம் மதிப்புள்ள வலை, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இதையும் படிக்க : நடை பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய போலீசார்...!
இதில் காயம் அடைந்த மீனவர்கள் மணியன், கோடிலிங்கம் ஆகியோர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.