5 ஆண்டுகள் காதல்
ஓசூர் தேர்பேட்டையை சேர்ந்த கோபால் என்பவரது மகன் கேசவன் (25) இவர் ஓசூர் மலைக்கோயிலில் தேங்காய் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர் மகள் ஆர்த்தி (19) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
பெற்றோர் எதிர்ப்பு
இவர்களது காதலுக்கு ஆர்த்தியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கேசவன் ஆர்த்தி இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி பழனி முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இன்று இருவரும் ஓசூர் நகர காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதுகுறித்து நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க |
இதனிடையே ஆர்த்தியின் பெற்றோர் ஆர்த்தியை காணவில்லை என காவேரிப்பட்டிணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்