தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்களில் ஆய்வு... அமைச்சர் கீதாஜீவன் உத்தரவு...

தமிழகம் முழுவதும் உள்ள காப்பகம், முதியோர் இல்லங்களை ஆய்வு செய்ய அமைச்சர் கீதாஜீவன் உத்தரவு.

Malaimurasu Seithigal TV
மதுரையில் ஒரு வயது குழந்தையை விற்றதன்  எதிரொலியாக  தமிழகம் முழுவதும் குழந்தைகள் காப்பகம் மற்றும் முதியோர் இல்லங்களை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு வார காலத்திற்குள் அனைத்து  குழந்தைகள் காப்பகம் மற்றும் முதியோர் இல்லங்களில் உரிமம் பெற்று உள்ளதா என்பது குறித்த கள ஆய்வு மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் கீதா ஜுவன் அறிவுறுத்தியுள்ளார்.