தமிழ்நாடு

கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து விபத்து.. குவாரி உரிமையாளரின் தம்பி, ஓடுநர் ஆகியோர் பலி!!

Suaif Arsath

பெரம்பலூர் அருகே கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் குவாரி உரிமையாளரின் தம்பி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்வபம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாறைகள் சரிந்து விழுந்து விபத்து:

பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமாக, கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. கல்குவாரியில், வழக்கம்போல பணிகளை செய்து கொண்டிருந்த முருகேசனின் தம்பியும், லாரி உரிமையாளருமான சுப்பிரமணி (40) மற்றும் ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செந்தில்குமார் (36) ஆகிய இருவர் மீது திடீரென பாறைகள் சரிந்து விழுந்தன. இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தார். செந்தில்குமார் படுகாயம் அடைந்தார்.

இருவர் பரிதாபமாக உயிரிழப்பு:

அங்கிருந்தவர்கள் படுமகாயமடைந்த செந்தில்குமாரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் சுப்பிரமணி, செந்தில்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் உடல்களை மீட்டு, உடற் கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு:

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு, உடற் கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த தகவல் அறிந்த கலெக்டர் வெங்கடபிரியா மற்றும் எஸ்.பி மணி, ஏடி.எஸ்.பி பாண்டியன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.