தமிழக காவல் துறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்களோ என ஐயம் எழுகிறது. சம்மன் கொடுத்து போகவில்லை என்றால் நீதிமன்றம் கைது செய்ய ஆணை பிறப்பிக்கும். கேட்டில் ஒட்டுவது ஆச்சரியம் அளிக்கிறது. தேடப்படும் குற்றவாளி வீட்டில் தான் சம்மன் ஒட்டுவார்கள். அடுத்த நாள் சீமான் ஆஜராகவில்லை என்றால் தான் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறை நடந்து கொண்ட விதம் ஏற்புடையதாக இல்லை. ஆதார பூர்வமாக சீமான் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம் அவரும் சாமானிய மனிதர் தான்.