தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதியில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் கூடுதல் எண்ணிக்கை தேவை என்பதால் கூட்டணியை நாடும் நிலையில் தவெக உள்ளது. நாளை அக்கட்சியின் விஜய் முதல்வராக பதிவு ஏற்க உள்ளத்தக்க தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதற்கான ஏற்பாடுகளும் சென்னை நேரு அரங்கில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் 118 எனும் பெருபான்மையை விஜய் நிரூபித்து ஆகவேண்டும். எனவே வெற்றி பெட்ரா மன்ற கூட்டணி கட்சிகளுடன் பெற்று வார்த்தை நடைபெற்று வருகிறது. தன்னால் இன்று காலையில், 2 தொகுதிகளை வென்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு “ தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்குமாறு” தவெக தலைவர் விஜய் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதையடுத்து மையலம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சிவி சண்முகம் விஜய்க்கு ஆதரவு அளிப்பதாக எழுந்த தகவலின் பேரில் அவரிடத்தில் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மறுப்பு தெரிவித்த சண்முகம் தலைமையை கேட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். தற்போது கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி தற்போது சிவி சண்முகத்தை சந்தித்து, தவெக உடனான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். அதிமுகவே தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு அழிக்கும் நிலை நிலவி வருவதாக தெரிகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.