தமிழ்நாடு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தமிழிசை திடீர் சந்திப்பு..!!

தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Malaimurasu Seithigal TV

சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை,

தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்த முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறினார்.

தமிழகத்திற்கும் பயன்பெறும் வகையில் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான திட்டங்கள் குறித்து ஆலோசித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கோதாவரி திட்டம் குறித்தும் முதலமைச்சருடன் பேசியதாககக் கூறிய தமிழிசை சவுந்தரராஜன், மாநிலம் பயன்பெறும் வகையில் ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.