vijay vs thiruma 
தமிழ்நாடு

“திருமா விட்ட அந்த வார்த்தை” யார் எப்படி போனா உங்களுக்கு என்னங்க!?? - பத்திரிகையாளர் மணி கேள்வி!!

ஆட்சி அதிகாரத்தில் அவர்கள் விஜய் -க்கு பங்கு கொடுக்கவும் துணிந்துவிட்டனர். ஆனால் இதில் திமுக -வும்...

மாலை முரசு செய்தி குழு

2026 சட்டமன்ற தேர்தலை தனித்துவமாக்கியதில் முக்கிய பங்கு விஜய்க்கு உண்டு. அவர் திமுக மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளுக்கும்  மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளார்.

விஜய் கட்சி துவங்கிய நாளிலிருந்தே அவருக்கான ஆதரவும், ரசிகர் கூட்டமும் பெருகி வழியத்துவங்கியது. விஜய் சில முக்கியமான இடங்களில் அரசியல்வாதியாக கோட்டை விட்டாரா? என்றால், ஆம் உண்மைதான். அதற்கு காரணம் அவர்கள் புதியவர்கள் அரசியலுக்கு பழக்கமில்லாதவர்கள், மேலும் அரசியல்மயப்படாத தொண்டர்களை வைத்திருப்பவர்கள். தவறி ஒரு முறை செய்தால் தான் அது தவறு.. மீண்டும் மீண்டும் செய்தால்..” அதை என்ன சொல்வதென்று தெரியவில்லை.

ஆனால் அவரின் அரசியல் பிரவேசத்தால் 41 -உயிர்கள் பலியானது என்ற உண்மையை இனி யாராலும் மாற்ற முடியாது. ஆனாலும் மக்கள் விஜய் மீது அதிகளவிலான வெறுப்புணர்வை உமிழவில்லை என்றுதான் தோன்றுகிறது. மேலும் இன்னமும் விஜயை பின்தொடரும் இளைஞர்கள் இருக்கின்றனர். அதுவே அவரின் மிகப்பெரும் பலம்.

திமுக ஆட்சிக்காலத்தில் நிறைய பெரும் தவறுகளை செய்துள்ளது. ஆட்சி அமைத்ததிலிருந்து, ஊழல், தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள், காவல் மரணங்கள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து உள்ளது. அதிலும் குறிப்பாக திமுக -வின் இமேஜை வெகுவாக உடைத்த ஒரு நிகழ்வு என்றால் அது ‘தூய்மை பணியாளர் போராட்டம் தான்” சென்னை திமுக -வின் கோட்டை என்று அறியப்படும் பகுதியாகும்.ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு மக்கள் திமுக மீதான தங்கள் வெறுப்பை வாக்குகளில் காட்டுவார்கள் என்று சொல்லப்படுகிறது. 

அடுத்ததாக அதிமுக -பாஜக கூட்டணி ஒருவேளை அதிமுக - தவெக கூட்டணி அமைத்திருந்தால் நிச்சயம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர் சிலர். ஆனால் அது எடப்பாடியின் முடிவு மட்டுமல்ல அமித்ஷா -வின் முடிவும் கூடத்தான் அதிமுக - பாஜக -வின் பிடியில் உள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது. 

இப்படி ஒரு தனித்துவமான தேர்தல் களத்தை தமிழ்நாடு இதற்கு முன்பு கண்டுள்ளதா என தெரியவில்லை.

இந்த சூழலில்தான் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளர் மணி பேசுகையில், “அதிமுக விஜய் உடன் கூட்டணி வைக்க போராடி வருகிறது, அடுத்த 6 மாதத்திற்கு அதிமுக -வின் ஒரே குறிக்கோள் திமுக -வை வீழ்த்துவது மட்டும்தான். அதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். ஆட்சி அதிகாரத்தில் அவர்கள் விஜய் -க்கு பங்கு கொடுக்கவும் துணிந்துவிட்டனர். ஆனால் இதில் திமுக -வும் கடும் பயத்தில் உள்ளது என்பது தான் நாம் பார்க்க வேண்டிய விஷயம். அதன் வெளிப்பாடுதான், தவெக - அதிமுக கூட்டணி அமையுமா என கேள்வி எழுப்பியதற்கு திருமாவளவன் “அதெல்லாம் வதந்தி” என பதில் அளித்துள்ளார்.  இந்த பதில் ஒரு பெரும் பயத்தின் வெளிப்பாடுதான். மேலும், திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என சொல்கிறீர்கள் அப்போது யார் எப்படி போனால் உங்களுக்கு என்ன? நீங்கள் ஏன்  இப்படி ஒரு பயத்திற் வெளிப்படுத்துகிறீர்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.