இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஒன்று முதல் 5 -ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு நாளை மறுதினம் முதல் 13-ம் தேதி வரையில் ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 30 ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித்துறை, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மே மாதம் நாளை வரை நடைபெறும் எனவும், நடப்பு கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 24 ம் தேதி துவங்குவதாகவும் அறிவித்துள்ளது.
மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 13 ம் தேதி துவங்கும் எனவும், நடப்பு கல்வியாண்டுக்கான கடைசி வேலைநாள் மே 13 ஆம் தேதி எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.