தமிழ்நாடு

பணியிடத்தை நிரப்புமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது..! - உயர் நீதிமன்ற மதுரை கிளை.

Malaimurasu Seithigal TV

ஒரு பணியிடத்தை அரசு தான் நிரப்ப முடியும் குறிப்பிட்ட பணி  காலியிடத்தை நிரப்புமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரையைச் சேர்ந்த மதுரம் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.  
அதில் தான்  ஈரோடு மாநகராட்சியில் நகரப் பொறியாளராகப்  பணியில் இருப்பதாகவும், தற்போது மாநகராட்சிகளில் தலைமைப் பொறியாளர் பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,  இதற்கு பணிமூப்பும், தகுதியும் தனக்கு உள்ளது திணறும் குறிப்பிட்டிருந்தார்.

அதோடு, தான்  வரும் 31-ம் தேதி  ஓய்வு பெறுவதாகவும், எனவே, தன்னை மதுரை மாநகராட்சி அல்லது வேறு ஏதேனும் ஒரு மாநகராட்சியில் தலைமைப் பொறியாளராக நியமனம் செய்யுமாறு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், ஒரு பணியிடத்தை அரசு தான் நிரப்ப முடியும் என்றும், குறிப்பிட்ட காலியிடத்தை நிரப்புமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது என்றும் கூறி  எனவே, மனுதாரரின் ஓய்வு காலத்தை கருத்தில் கொண்டு அவரது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் எனவும், உத்தரவிட்டுள்ளார்.