விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்
தொல். திருமாவளவன் அவர்கள் மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் அருமைத் தாயார் இன்று காலமானார் என்பதையறிந்து வேதனைப்படுகிறேன். நூறாண்டுகள் வாழ்ந்து தனது மகனை நாடாளும் ஆட்சிப் பீடத்தில் காணும் பெரும்பேறு பெற்றவர். தாயை இழக்கும் துயரம் கொடியது.பிரதமருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என டுவீட்டரில் பதிவிட்டிருந்தார்.