தமிழ்நாடு

தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்...

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களுடன் இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்து பேசியதாகவும்  மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய  வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Malaimurasu Seithigal TV

மேலும் அவர்களின் உறவினர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு ஏற்பட்ட ஒரு மீனவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த இந்திய தூதரக அதிகாரி அவரை மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்ததாகவும்  இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பான பிரச்சினையை இலங்கை அரசிடம் எடுத்துக் கூறி உள்ளதாகவும் மத்திய வெளியுறவு  அமைச்சகம் கூறியுள்ளது.