தமிழகத்தின் இருபெரும் அரசியல் அலைகள் அடுத்தடுத்து ஓய்ந்தபோது, அதுவரை தங்கள் அதிகாரத்திற்கோ, லாபத்திற்கோ, அங்கீகாரத்துக்காகவோ காத்திருந்தவர்கள் எல்லாம், கோட்டைக்குள் செல்லும் வழியை தேடலாயினர்.
கருணாநிதி-ஜெயலலிதா இவர்கள் இருவரும் ஊழல்வாதிகளாகவே இருந்தபோதும், கொள்கை தெரிந்து அரசியல் செய்தவர்கள், காரணம் இவர்கள் அரசியல் கற்றுக்கொண்ட இடமே, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்.
இவர்கள் இருவரின் மறைவுக்கு பிறகு தமிழகம் ஒரு வெற்றிடத்தை உணர்ந்தது.
அதிலும் குறிப்பாக ஜெயலலிதா அவர்கள் மறைந்தபோது நடந்த அரசியலை விவகாரங்களை மையப்படுத்தி ஒரு காமெடி படமே எடுக்கும் அளவுக்குத்தான் அதிமுகவினரின் செயல்பாடுகள் இருந்தது.
வெற்றிடத்தை நிரப்ப வந்தாரா கமல்?
திமுக -விற்காவது அரசியல் வாரிசு என ஸ்டாலின் இருந்தார். ஆனால் அதிமுக -வில் ஜெயலலிதா அப்படி யாரையும் அவர் இறக்கும் வரை கைகாட்டவில்லை. ஆகையால் மக்களிடம் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப பல பேருக்கு சாதகமாக ஜெ-வின் மறைவு காலம் அமைந்தது.அந்த சமையத்தில் தான் ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை தீவிரமாக (2017) துவங்கினார். ஆனால் காலப்போக்கில் சில பல காரணங்களால் அவரால் அரசியலில் நீடிக்க முடியவில்லை.
திமுக -விற்காவது அரசியல் வாரிசு என ஸ்டாலின் இருந்தார். ஆனால் அதிமுக -வில் ஜெயலலிதா அப்படி யாரையும் அவர் இறக்கும் வரை கைகாட்டவில்லை.ஆகையால் மக்களிடம் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப பல பேருக்கு சாதகமாக ஜெ-வின் மறைவு காலம் அமைந்தது.அந்த சமையத்தில் தான் ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை தீவிரமாக (2017) துவங்கினார். ஆனால் காலப்போக்கில் சில பல காரணங்களால் அவரால் அரசியலில் நீடிக்க முடியவில்லை.
ஆளுங்கட்சியின் மீதான விமர்சனங்களை ட்விட்டரில் தொடங்கிய கமல், பின்னர் முழு அரசியல்வாதியாகவே களமிறங்கினார். அதன்பிறகு அவர் மக்களைத் தொடர்ந்து சந்தித்து வந்தார். ஆனால் அரசியலின் மிகப்பெரும் மூலப்பொருள் பேச்சு. நல்ல பேச்சு வல்லமை வாய்க்கப்பெற்றாலும் தனது பூடக மொழி தன்மையால் அவர் சொல்லும் கருத்துக்கள் மக்களை சென்று சேரவில்லையோ என்ற கருத்தும் நிலவுகிறது.
அரசியல் களத்துக்கு வரும்போது, "தி.மு.க, அ.தி.மு.க என்கிற ஊழல் கட்சிகளைப் புறந்தள்ளுவோம்” என்றார் கமல்ஹாசன். ஆனால்,கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க-வுடனேயே அவர் கூட்டணியாகக் கைகோர்த்து மாநிலங்களவை எம்.பி -ஆக அறிவிக்கப்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
மாநிலங்களவை எம்.பி
ஆரம்ப காலங்களில் திமுக-வை கடுமையாக எதிர்த்த கமல் கடந்த தேர்தலில் திமுக -வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது அவரின் நிலைப்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு “மக்கள் நலனுக்காகவே” இந்த முடிவை எடுத்தேன் எனக்கூறியிருந்தார் .
இந்த சூழலில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் துரிதமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் மக்கள் நீதி மையமும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை அடையாற்றில் அமைந்துள்ள முத்தமிழ் பேரவையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், எதிர்கால திட்டங்கள் மற்றும் தேர்தல் வியூகங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய கமல் ஹாசன், “திமுகவில் சேர்ந்து விட்டதாக சொல்கிறார்கள். இது கூட்டணி கிடையாது. அதற்கும் மேல் புனிதமானது, என்று குறிப்பிட்டார். திமுக எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பிய கமல்ஹாசன், நீதிக் கட்சியில் இருந்து தான் திமுக உருவானது என்று சுட்டிக்காட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் நீதி உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.