தமிழ்நாடு

மது பழக்கத்தை கண்டித்த தந்தையை வெட்டிக் கொன்ற மகன் - போலீசார் வலைவீச்சு!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், மது பழக்கத்தை கண்டித்த தந்தையை வெட்டிக் கொன்ற மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tamil Selvi Selvakumar

ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகர், ரெட்டி தெருவை சேர்ந்த ராமுவின் மகன் தினேஷ். மதுப்பழகத்திற்கு தினேஷ் அடிமையான நிலையில், அவரை ராமு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு தினேஷ் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் வீட்டிற்கு வந்தவர் மது குடித்துள்ளார்.

இதை கண்டித்த தந்தை ராமுவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினார். ராமுவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. மேலும் இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் விசாரித்து வருகிறனர்.