தமிழ்நாடு

மாவட்டங்களை இணைக்கும் சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணி விரைவில் தொடங்கும் - அமைச்சர் எ.வ.வேலு

மாவட்டங்களை இணைக்கும் சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

Suaif Arsath

சட்டபேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர்,

மணப்பாறையில், திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 7.5 கிலோமீட்டர் நீளத்துக்கு புறவழிச்சாலை அமைக்க 49 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி முடிவுறும் தருவாயில் உள்ளதாகவும், விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்ட உடன், நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று, பின் புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கும் என்று கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் ரயில்வே லைன் மீது மேம்பாலம் அமைத்தல், சுரங்க பாலம் அமைத்தல் மற்றும் நிலம் கையகப்படுத்துதலில் எழும் சிக்கல்களால் தாமதமாவதோடு, திட்டச் செலவு உயருவது உள்ளிட்ட பிரச்சனைகளைத் தீர்க்க, அரசால் அறிவிக்கப்பட்டுள்ள சாலைப் பணிகளுக்கு நில எடுப்பு செய்வதற்காக 5 சிறப்பு DRO-க்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேப்போல், மாவட்டங்களை இணைக்கும் சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணி விரைவில் தொடங்க உள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு குறிப்பிட்டார்.