தேனி: தீபம் தற்காப்பு கலை அறக்கட்டளை மற்றும் தென்னிந்திய பாரம்பரிய சிலம்பாட்ட கலைக்கழகம் இணைந்து பாவல வரிசையுடன் அடிமுறையும் சேர்த்து தொடர்ச்சியாக 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி சோழா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான உலக சாதனை முயற்சியில் 173 மாணவ மாணவியர்கள் ஈடுபட்டனர்.
தேனி அருகே உள்ள ஸ்ரீரங்கபுரத்தில் நடைபெற்ற இந்த உலக சாதனை முயற்சியில் மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மழையையும் பொருட்படுத்தாமல் தமிழக பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
மேலும் படிக்க | ஒற்றைக் காலில் சிலம்பம்! மாவட்ட அளவில் முதல் பரிசு!!!
மற்றும் ஒரு சாதனையாக 8 வயது ஹரிஷ் என்ற மாணவன் 50 நிமிடங்களில் சிலம்பம் சுற்றியவாறு ஆயிரம் தோப்புக்கரணம் போட்டு உலக சாதனை படைத்தார். தேச தந்தை மகாத்மா காந்தி ஜெயந்தி நாளன்று 173 மாணவ மாணவியர்கள் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டு சோழா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
உலக சாதனை முயற்சியில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும் சோழா புத்தக நிறுவனர் முனைவர் நீலமேகம் விமலன் தீபம் அறக்கட்டளை மற்றும் தென்னிந்திய பாரம்பரிய சிலம்பாட்ட கலை கழகம் நிர்வாகிகள் மாணவ மாணவியர்களுக்கு வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார்.
மேலும் படிக்க | சிலம்பத்தில் மேலும் ஒரு சாதனை!!!