திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் பள்ளி மாணவனை 10க்கும் மேற்பட்டோர் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆவடி காமராஜ் நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கோணம்பேடு பள்ளியை சேர்ந்த மாணவ - மாணவியர் பொதுத்தேர்வு எழுத வந்தனர்.
அப்போது அரசு பள்ளி மாணவர்கள், அப்பள்ளி மாணவிகளை கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனை மாணவிகள் சக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்த சிபி என்ற மாணவனை, கோணம்பேடு பள்ளி மாணவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த பள்ளி மாணவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து வந்த ஆவடி போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இதுத்தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.