"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் ஸ்ரீபெரும்புதூர், பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகளைக் கொண்ட மிக முக்கியமான தொகுதியாகும். தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருந்தாலும், 2026 தேர்தலில் அதிமுகவின் மீட்சி இந்தத் தொகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களாக 41 முதல் 60 வயதுடையவர்கள் 39.6 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 34.1 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியாக ஆதிதிராவிடர்கள் 32 சதவீதத்தோடு பெரும்பான்மை வகிக்கிறார்கள். வன்னியர்கள் 20 சதவீதமும், முதலியார்கள் 12 சதவீதமும் உள்ளனர். 58 சதவீத கிராமப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாக்குகள் தான் வெற்றியாளரைத் தீர்மானிக்கின்றன.
முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகத் தொழிற்சாலைகள் அதிகம் இருந்தாலும் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவாக இருப்பது முதன்மையான புகாராக உள்ளது. தொழிற்சாலைக் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபடுவது மற்றும் கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால் கிராமப்புறச் சாலைகள் சேதமடைவது மக்களின் பெரும் அதிருப்திக்குக் காரணமாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் நீருக்கான வடிகால் வாய்க்கால்கள் முறையாகச் சீரமைக்கப்படாதது மழைக் காலங்களில் வெள்ள அபாயத்தை ஏற்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்
தேர்தல் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2021-ல் திமுக கூட்டணி (INC) 44 சதவீத வாக்குகளைப் பெற்றது, அது 2024-ல் 53 சதவீதமாக அதிரடியாக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 39.9 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-ல் 32.5 சதவீதமாகச் சரிந்துள்ளது. பூத் அளவில், 2021-ல் திமுக 135 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் 145 ஆக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 101 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 98 பூத்களாகச் சற்றே குறைந்துள்ளது. சுமார் 35 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன.
2026 தேர்தல் கணிப்பின்படி, ஸ்ரீபெரும்புதூரில் அதிமுக 125 வாக்குச்சாவடிகளில் வலுவாக உள்ளது. திமுக 115 வாக்குச்சாவடிகளில் தனது பலத்தைக் கொண்டுள்ளது. சுமார் 95 வாக்குச்சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் மாறக்கூடிய ஸ்விங் பூத்களாக உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் முடிவுகளின்படி, 2026-ல் அதிமுக 35 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் எனத் தெரிகிறது. திமுக 33 சதவீத வாக்குகளைப் பெறும் நிலையில் உள்ளது. தவெக மற்றும் நாம் தமிழர் கூட்டணி 27 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. வெற்றி வித்தியாசம் சுமார் 2 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்பதால், தொழிலாளர் வாக்குகளைக் கவரும் கட்சியே இறுதி வெற்றியை அடையும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.