பாஜகவினர் தமிழகத்திற்கு எதிரானவர்கள்-மாணிக்கம் தாகூர்  Admin
தமிழ்நாடு

பாஜகவினர் தமிழகத்திற்கு எதிரானவர்கள்-மாணிக்கம் தாகூர்

சாத்தூரில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்கு பேட்டி ....

Anbarasan, malaimurasu.com

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சுந்தரகுடும்பம்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் இல்லத்திற்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சென்ற நிலையில் அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை தீடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் மற்றும் குழந்தை களின் வருகை பதிவு குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழகம் ஏற்றுக் கொள்ளா விட்டால் நிதி வழங்க படாது என மத்திய கல்வித் துறை அமைச்சர் பேசி இருப்பது என்பது ஒரு மாநிலத்தையும் மற்றும் ஒரு இனத்தையே அவமானப்படுத்தியது ஆகும் என விமர்சனம் செய்தார்.

மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் மத்திய அரசின் ஒரு திட்டத்தில் தமிழகம் சேர வில்லை என்றால் தமிழகத்தில் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார்கள் என பேசுவது என்பது அயோக்கியத் தனத்தின் உச்சம் என்றார்.

மேலும் பிற மொழிகள் குறித்து டெல்லியில் இருந்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சொல்வதை மற்ற மாநிலங்கள் கேட்க வேண்டும் என்ற மனப்பான்மையுடன் ஆர் எஸ் எஸ் இருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் மத்திய கல்வி அமைச்சர் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் மத்திய அமைச்சர் பேச்சு என்பது தமிழகம் மற்றும் மொத்த தமிழர் களையும் அவமானப்படுத்துகின்ற விதத்திலே பேசி இருப்பது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் தமிழக பாஜகவினர் கட்சிக்கு விசுவாசமாக இருக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு தமிழகத்திற்கு எதிராக மாறிக் கொண்டிருக்கிறார் கள் என்றார்..

மேலும் தமிழக பாஜக தலைவர்களை பொறுத்த வரையில் அவர்கள் தமிழ் மண்ணுக்கு எதிரானவர்கள் என்பதும் தமிழக மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை மீண்டும் காட்டி இருக்கிறார்கள் என விமர்சனம் செய்தார்.

மேலும் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மத்திய கல்வி அமைச்சர் பேசிய விவகாரம் குறித்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் குரல் எழுப்புவோம் எனவும் இதற்காக போராட்டம் நடத்துவோம் என்றார்.

மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் எம்.பி ஒரு மாநிலத்தில் இந்தி மொழி வந்தால் பல வகையில் தங்களுக்கு பிரச்சினை வரும் என்று தமிழகம் ஒரு கொந்தளித்த காலம் உண்டு எனவும் அதை தான் இந்தி திணிப்பு என்றார்.

மேலும் பேசிய மத்திய பாடத் திட்டத்தையும் மாநில பாடத் திட்டத்தையும் ஒப்பிட்டு பார்ப்பது என்பது பாஜகவின் அரை வேக்காட்டுத்தனத்தை காட்டுகிறது என்றார்.

மேலும் பாஜகவினரை பொருத்த மட்டில் தவறான ஒரு கொள்கையை திணிப்பதற்காக முயற்சி செய்கிறார்கள் என்பது தான் பிரச்சனை என்றார்.

மேலும் பாஜகவினரை பொருத்த மட்டில் எந்த குழந்தையாக இருந்தாலும் சரி அந்தக் குழந்தை தேவையான மொழியை படிக்கின்ற பிளாட்பார்மை கொடுக்க வேண்டுமே தவிர கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும் எனக் அரசு பள்ளி மாணவரை வலியுறுத்துவது தான் இந்தி திணிப்பு என்றார்.

மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் கட்சி பொருத்தமட்டில் பாதுகாப்பு விஷயங்களில் என்றுமே நாங்கள் அரசியல் செய்வதில்லை என்றார். பாஜகவினர் பலரும் மத பிரிவினைவாதத்தை பேசுபவர் களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது என்றார்.

மேலும் காங்கிரஸ் கட்சியை பொருத்தமட்டில் பாதுகாப்பு குறைபாடுகளால் எங்களின் இரண்டு தலைவர்களை இழந்துள்ளோம் என்றார்.

மேலும் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பிரசாந்த் கிஷோர் அரசியல்வாதியாக மாறி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது எனவும் அவரை ஒரு அரசியல் தலைவராக தான் பார்க்க வேண்டுமே தவிர அவர் சொல்வதெல்லாம் உண்மை என நினைக்கக் கூடாது என்றார். மேலும் பிரசாந்த் கிஷோர் செய்வது மோடி மஸ்தான் வேலை என தவெக தலைவர் விஜய்க்கு தெரிந்ததால் அவரை வெறுங்கையோடு அனுப்பிவிட்டார் என்றார்.