உலகம்

அரெஸ்ட் வாரண்ட் உடன் வந்த போலீசார்... விசாரணைக்கு பயந்த குடும்பம்...7 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!

போலீஸின் விசாரணைக்கு பயந்து குடும்பமாய் சேர்ந்து 7 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சுவிட்சர்லாந்தில் அரங்கேறியுள்ளது.

Tamil Selvi Selvakumar

சுவிட்சர்லாந்து மோன்ட்ரீயுக்ஸ் பகுதியில்  உள்ள ஒரு அபார்ட்மெண்டில் 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளனர். அந்த குடும்பத்தில் 51-வயதை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி , மகன் , மகள் மற்றும் மனைவியின் சகோதரியுடன் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்ற வழக்கில் ஈடுபட்டதாக அந்த குடும்பத்தின் தலைவரை கைது செய்ய அரெஸ்ட் வாரண்ட் உடன் போலீசார் சென்றுள்ளனர். இந்த தகவலை ரகசியமாக அறிந்த குடும்பத்தினர் ஜன்னல் வழியாக போலீசார் வருவதை பார்த்துவிட்டு கதவை திறக்காமல் ஒட்டுமொத்தமாக 7-வது மாடியில் இருந்து குதித்துள்ளனர்.

போலீசார் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் தற்கொலை செய்துக்கொண்ட 5 நபர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். அதில் ஒரு நபர் மட்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து மோன்ட்ரீயுக்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.