உலகம்

கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வாழ்க்கை......

Malaimurasu Seithigal TV

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். 

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலிபான் பயங்கரவாதிகளின் ஆட்சி நடந்து வருகிறது.  இவர்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.  இது ஒருபுறம் இருக்க தற்போது கடுமையான பனிப்பொழிவு மக்களை வதைத்து வருகிறது. 

தலைநகர் காபூல் மற்றும் அதனை சுற்றியுள்ள சில மாகாணங்களில் வெப்பநிலை மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது.

-நப்பசலையார்