உலகம்

ஊழலிலிருந்து தப்பிக்க கொண்டு வரப்பட்ட புதிய சட்டம்...!!!

Malaimurasu Seithigal TV

இஸ்ரேலின் ப்னை ப்ராக் பகுதியில் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரகணக்கான பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ப்னை ப்ராக் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிபரின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் குவிந்தனர்.  அப்போது பேசிய அவர்கள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியதாக கூறினர்.  

இருப்பினும் இந்தத் திட்டம் நெதன்யாகுவின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான விசாரணையில் இருந்து விடுபடவே இவ்வாறு நீதிமன்ற சட்டங்களை மாற்றியமைக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.