சீர்காழியில் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு...!

சீர்காழியில் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு...!

சீர்காழி சட்டநாதர் கோவிலில் 22 ஐம்பொன் சிலைகள்,55 பீடம் மற்றும் 100 க்கும் மேற்ப்ட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டள்ளது. அவை சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக்கூடும் என தகவல்களில்  கூறப்படுகிறது. 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் பழைமை வாய்ந்த சட்டநாதர் கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் வருகிற மே 24ஆம் தேதி  நடைபெற இருக்கிறது. அதற்காக அக்கோவில்  புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் யாகசாலை அமைப்பதற்காக களிமண் எடுக்க மேற்கு கோபுர வாயிலில் கோயில் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோன்டப்பட்டது.  அப்போது 2 அடியில் புதைந்திருந்த விநாயகர்,முருகர்,வள்ளி,தெய்வானை, சோமஸ்கந்தர்,அம்பாள், பூர்ண புஷ்கலா அய்யனார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 22 ஐம்பொன் சிலைகல் கண்டெடுக்கப்பட்டன. இவை அரை அடி முதல் 2 அடி உயரம் உடையது. மேலும்  திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற 400க்கும் மேற்பட்ட சீர்காழி பதிகம் தாங்கிய தேவார செப்பேடும் கண்டெடுக்கப்பட்டது.

 இதையும் படிக்க | இசைத்துறையில் சாதித்த பாடகர் மனோவுக்கு டாக்டர் பட்டம்

அதனை தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரம்மாசாரியர் சுவாமிகள் நேரில் பார்வையிட்டு அவைகள் எந்த காலத்துக்குரிய சிலைகள் என கேட்டறிந்தார். இதுவரையில் இதுபோன்று எங்கும் கிடைக்காத வகையில் ஒரே இடத்தில் 22  ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதால் சீர்காழி பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது,இதனை அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது.

 இதையும் படிக்க | குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும்’ : ராமதாஸ்

மேலும் இது குறித்த தகவல் அறிந்து தஞ்சாவூர் தொல்லியல் துறையினர் சீர்காழி நோக்கி விரைந்து வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.