"தூரிகையாக மாறிய கிரிக்கெட் பேட்" - தோனியை வரைந்து ஓவியர் அசத்தல்!

"தூரிகையாக மாறிய கிரிக்கெட் பேட்" - தோனியை வரைந்து ஓவியர் அசத்தல்!
Published on
Updated on
1 min read

இன்று, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஓவியர் ஒருவர் புதிய முயற்சி செய்து தோனியின் படத்தை வரைந்துள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம்.

இன்று, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, 42-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 

அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஓவியர் செல்வம், தோனியின் உருவ படத்தை, பிரஷ்-க்கு பதிலாக கிரிக்கெட் மட்டையை பயன்படுத்தி 8 நிமிடத்தில் வரைந்து அசத்தியுள்ளார். 

ஓவியர் செல்வத்தின் இந்த முயற்சியை பாராட்டி, பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com