ஓட்டுநர் நடத்துனா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!!

ஓட்டுநர் நடத்துனா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!!

தமிழ்நாட்டில் 685 ஓட்டுநருடன் நடத்துநர்கள் பணிகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. 

அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்ட சபையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 685 ஓட்டுநருடன் நடத்துநர்கள் நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இன்று முதல் இணையதளம் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநருடன் நடத்துநர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மதியம் 1 மணி முதல் செப்டம்பா் மாதம் 18-ம் தேதி மதியம் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க || அவசர பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் ரவி... என்னவாக இருக்கும்?