கலவரக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு...மணிப்பூர் ஆளுநர் அதிரடி!

கலவரக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு...மணிப்பூர் ஆளுநர் அதிரடி!
Published on
Updated on
1 min read

மணிப்பூரில் கலவரம் நீடித்து வரும் நிலையில் கலவரக்காரர்களை கண்டவுடன் சுடுவதற்கு மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இன மக்கள் பழங்குடி அந்தஸ்து கோரி பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. ஆனால், இந்த பேரணிக்கு எதிராக மாநிலத்தின் சில பகுதிகளில் எதிர்தரப்பினர் பேரணி நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமானது. 

இரவில் நடந்த இந்த கலவரத்தில், குடியிருப்புகளுக்கு தீ வைக்கப்பட்ட நிலையில், நகரமே தீப்பிடித்து எரிந்தது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் தொலை தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து கலவரம் நடந்த பகுதிகளில் ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக கொடி அணிவகுப்பையும் நடத்தினர். 

இந்நிலையில், மணிப்பூரில் கலவரம் நீடித்து வரும் நிலையில், போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர கலவரக்காரர்களை கண்டவுடன் சுடுவதற்கு மாநில ஆளுநர் அனிஷியா உய்கே உத்தரவிட்டுள்ளார். மேலும், அம்மாநிலத்தில் 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com