ஏற்கனவே அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் வழக்குகள், கொடநாடு எஸ்டேட் விவகாரம், ஓ.பன்னீர் செல்வத்திடம் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு, சசிகலா அதிமுக தொண்டர்களிடம் போனில் பேசி வருவது, எப்போது வேண்டுமானாலும் திமுக பக்கம் சாயவிருக்கும் நிர்வாகிகள் என பல பிரச்னைகளில் சிக்கி சின்னாப் பின்னாமாகி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா இறந்த பிறகு முதலமைச்சர் பதவியில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமியுடன் ஒப்படைத்தது சசிகலா தான்.