அணிலுக்கு 4 முன்பற்கள் இருக்கும். இந்த முன்பற்கள் மிக நீளமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் கூர்மையாகவும் தொடர்ந்து வளரக்கூடிய தன்மை கொண்டது. இது ஆண்டுக்கு ஆறு அங்குல அளவில் வளரும். இதனால்தான் அணில்கள் மரப்பட்டை, கொட்டைகளை மற்றும் கையில் கிடைத்தவற்றை தொடர்ந்து கொறித்துக் கொண்டே இருக்கும். இப்படி அணில்கள் கொறிக்காவிட்டால் பற்கள் தொடர்ந்து நீளமாக வளர்ந்துவிடும். அப்படி நீளமாக வளர்ந்து விட்டால் அதன் வாயை அசைக்க முடியாது. ஆகையால் தான் எப்பொழுது பார்த்தாலும் அணில்கள் கொறித்து கொண்டே இருக்கிறது.