யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும் என்ற பழமொழி இங்கு நிரூபணமாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலின் போது, அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள பெரிதும் தயங்கியது. ஏற்கனவே ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, சிஏஏ போன்ற நடவடிக்கைகளால் பாஜக மீது அதிருப்தியில் தமிழக மக்கள் இருக்கையில், அவர்களுடன் எப்படி கூட்டணி வைப்பது என சிந்தித்துக் கொண்டே இருந்தது அதிமுக தலைமை.