

ஆமெரிக்காவில் பணத்த தருவதற்கு பதிலாக இரண்டு வயதுக் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோக்களாக பதிவு செய்த ஒரு பதின்வயதுப் பெண். தகவல் கிடைத்ததையடுத்து அவர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
22 வயதான டைலர் ஹட்சன் மீது, இரண்டு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள், மற்றும் இரண்டு குழந்தைகளிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாக குற்ற சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஆர்கன்சாஸைச் சேர்ந்த அந்த நபர், 19 வயதான ஹெய்லி ஷ்மிட்டுடன் சேர்ந்து ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஷ்மிட், 2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து, அந்த கொடூரமான சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்ததாகக் கூறப்படும் ஆதாரங்களை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்ததை அடுத்து, கடத்த ஜூலை மாதம் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
துப்பறிவாளர்களால் இணையத்தில் கண்டெடுக்கப்பட்ட காணொளிக் காட்சியில், ஷ்மிட் இரண்டு ஆண்களின் வழிகாட்டுதலின் பேரில் தான் பெற்ற பணத்திற்கு ஈடாக அந்தக் குழந்தையிடம் பாலியல் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஒரு தேடுதல் ஆணை பிறப்பிக்கப்பட்டு, ஷ்மிட் 2 வயது குழந்தையை பாலியல் செயல்களில் ஈடுபடக் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படும் பல வீடியோக்களும் படங்களும் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தங்களது விசாரணையின் போது, துப்பறிவாளர்கள் ஹட்சனின் சமூக ஊடகக் கணக்குகளைக் கண்டறிந்தனர். இருவருக்கும் இடையேயான உரையாடல்களை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், குழந்தைகளை பாலியல் பாலியல் வன்கொடுமை செய்ய பயன்படும் பொருட்கள் அடங்கிய கோப்புகள் உருவாக்கப்பட்டுப் பதிவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், சட்ட அமலாக்க அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டபோது, ஹட்சனின் வேண்டுகோளின் பேரில், 25 டாலருக்கு ஈடாக, இரண்டு வயது குழந்தையைத் துன்புறுத்துவதை ஆவணப்படுத்தும் பல வீடியோக்களை உருவாக்கியதாக ஷ்மிட் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், அவர்தான் இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட வீடியோவில் இருந்ததாரா என்பதை ஷ்மிட்டின் தனித்துவமான பட்டாம்பூச்சி பச்சை குத்தல்களைக் கொண்டு, காணொளியில் தோன்றும் பெண் ஷ்மிட்தான் என்பதை புலனாய்வாளர்களால் அடையாளம் காண முடிந்ததாக கூறப்படுகிறது. மேலும், இன்ஸ்டாகிராமில் ஷ்மிட்டிற்கும் ஹட்சனுக்கும் இடையே நடந்த பல உரையாடல்களை ஆராய்ந்த புலனாய்வாளர்கள், பணத்திற்கு ஈடாக குழந்தையிடம் குறிப்பிட்ட பாலியல் செயல்களைச் செய்யுமாறு ஹட்சன் ஷ்மிட்டிடம் அறிவுறுத்தியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த உரையாடல்கள் ஜூன் 6 முதல் 8 வரை நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, மரியன் உயர் நீதிமன்றம் ஹட்சனுக்கு எதிராக ஒரு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டதாக இணையவழி நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன. இந்த வழக்கு தொடர்பான தனது ஜூரி விசாரணையின் தொடக்கத்திற்காக, ஷ்மிட் வரும் செப்டம்பர் 29 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்