போதை பொருள் வந்த கேரளாவை சேர்ந்த 4 பேர் கைது..!

போதை பொருள் வந்த கேரளாவை சேர்ந்த 4 பேர் கைது..!
Published on
Updated on
1 min read

நீலகிரி மாவட்டம் கக்கநல்லா சோதனை சாவடியில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில், போதை பொருளை கடத்தி வந்த கேரளாவை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கக்கநல்லா சோதனை சாவடியில் கூடலூர் ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது கேரளா பதிவு எண் கொண்ட வாகனத்தை சோதனை செய்யும் போது தடை செய்யப்பட்ட சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள 120 கிராம் MDMA போதை பொருள் எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த முனீர் (30), பசீல் ஜமான் (26), சையத் (21), ஷாப்பாஸ் (26) ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்து மசினகுடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் போதை பொருள் கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com