

கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரல் பாலியல் வழக்கில் சிக்கியதை அடுத்து, தற்போது அவரை கைது செய்யவும், அவரது மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்யவும் வங்காள காவல்துறைக்கு கல்கத்தா உயர் நீதிமன்றம் ஜூலை 14 அன்று உத்தரவிட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதியை அளித்து, தன்னைப் பாலியல் ரீதியாகத் தாக்கித் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர் போரல் மீது பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளார். மேலும், அவர்கள் ஒன்றாக இருந்த நேரங்களை, அந்தரங்கத் தருணங்களின் புகைப்படங்களைப் பொதுவெளியில் வெளியிடுவதாக போரல் மிரட்டியதாகவும் அந்த பெண் உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். "போரலைக் காவல்துறை கைது செய்து, அதில் சேமிக்கப்பட்டுள்ள அருவருப்பான தரவுகள் வெளியாகாமல் தடுக்கும் வகையில் அவரது மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்" என்று நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு பென் டிரைவைக் (Pendrive) கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். ஆனால், போரெல் இன்னும் தலைமறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை மொக்ரா காவல் நிலையம் விசாரித்து வருகிறது. புகாரின்படி, போரெல் அந்தப் பெண்ணை ஜனவரி 2023-ல் முதன்முதலில் சந்தித்துள்ளார். மேலும், ஏப்ரல் 2023 முதல் அவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர். போரெல் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் இந்தத் திட்டங்களில் அவர்களது குடும்பத்தினரும் ஈடுபட்டுள்ளனர். 2026, ஏப்ரல் 2 அன்று, டெல்லியில் போரெலைச் சந்திக்கச் சென்றபோது, தான் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், தனிமைப்படுத்தப்பட்டதாகவும், உணவு கூட மறுக்கப்பட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். அதன் பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போரெல் தன்னை மிரட்டியதாக அவர் குற்றம் சாட்டினார். அதன் காரணமாகவே அவர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து, காவல்துறை போரல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி அந்த பெண் உயர் நீதிமன்றத்தை தற்போது அணுகியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.