
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஞானசேகரனுக்கு எதிரான வழக்கில் “ஞானசேகரன் குற்றவாளி” என சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்தது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மாணவி ஒருவர் கோட் டூர்புரம் காவல் நிலையத்தில் டிசம்பர் 24-ம் தேதி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படை யில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஞானசேகரனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக சுமார் 100 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. தினந்தோறும் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் காவல்துறை தரப்பில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். சுமார் 75 சான்று ஆவணங் கள் தாக்கல் செய்யப்பட் டது. காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தி, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அறிவியல் ரீதியான ஆதாரங்கள் உள்ளது என்று வாதிட்டார்.
குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சந்தேகத்தின் அடிப்படை யில் மட்டுமே இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரம் இல்லை எனவே வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று வாதிட்டிருந்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீதிபதி இந்த வழக்கில் “ஞானசேகரன் குற்றவாளி” என தீர்ப்பு அளித்துள்ளார். “காவல்துறை தரப்பில் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. ஆனால் தண்டனை விபரம் குறித்து ஞானசேகரனிடம் கருத்து கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஞானசேகரன் தனக்கு “8 -ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையும், வயதான தாயும் இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் “ எனக்கோரியுள்ளார்.
ஐந்து மாதங்களில் நடந்த இந்த வழக்கு புலன் விசாரணை, சாட்சி விசாரணை முடிவில் ஞானசேகரனுக்கு எதிராக 11 சாட்சியங்கள் உள்ளன. தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்