குடும்பத்தோடு வங்கி மேலாளர் தற்கொலை முயற்சி.. உயிருக்கு போராடும் மகன்!!

திண்டுக்கல்லில் கடன் தொல்லையால் வங்கி மேலாளர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்று அவரது மனைவி உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த மேலாளரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குடும்பத்தோடு வங்கி மேலாளர் தற்கொலை முயற்சி.. உயிருக்கு போராடும் மகன்!!
Published on
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கோவில்பட்டியைச் சேர்ந்த தம்பதி முத்துராமலிங்கம்- உமாகோமதி.

வங்கி மேலாளராக பணிபுரிந்த வந்த முத்துராமலிங்கம் ஏப்ரல் மாதம் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

இவருக்கு அதிகளவில் கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தனது மனைவி மற்றும் மகனுடன் கடந்த மூன்றாம் தேதி விஷமருந்தியுள்ளார். இதில் உமாகோமதி வீட்டிலேயே இறந்துவிட்டார்.

இதனையடுத்து முத்துராமலிங்கத்தையும், அவரது மகனையும் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முத்துராமலிங்கம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவரது மகனும் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடன் தொல்லையால் வங்கி மேலாளர் மற்றும் அவரது மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com