கொடூரமாக சீரழிக்கப்பட்ட பெண்! "அந்தரங்க உறுப்பில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டா, மரத்துண்டுகள்" ஒருவாரத்திற்கு பிறகு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை

வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் என்னை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர்,”
Bihar crime news
Bihar crime newsBihar crime news
Published on
Updated on
2 min read

பிகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் பகுதியில் ஜூன் 11 அன்று சாகியா காவல் நிலையப் பகுதியில் நடந்த கூட்டுப் பாலியல் வன்புணர்வின்போது, ​​பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் அடைந்த காயங்கள் ஒட்டுமொத்த காவல்துறையையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

வியாழக்கிழமை பெகுசராய் சதர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த அறுவை சிகிச்சையின்போது, ​​அவரது அந்தரங்க உறுப்புகளிலிருந்து ஒரு தோட்டா, ஒரு கூழாங்கல் மற்றும் ஒரு மரத்துண்டு ஆகியவை மீட்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு கண்டறியப்பட்ட இந்த அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பு, பெரும் சீற்றத்தைத் தூண்டி, காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது குடும்பத்தினரும் கூறியபடி, இந்தச் சம்பவம் ஜூன் 11 அன்று நள்ளிரவு வாக்கில் சாகியா காவல் நிலையப் பகுதியில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. வீட்டிற்கு வெளியே இருந்த கழிப்பறையைப் பயன்படுத்துவதற்காகத் தான் வீட்டை விட்டு அந்த பெண் வெளியே வந்துள்ளார். அப்போது, ​​ஆயுதம் ஏந்திய நபர்கள் குழு ஒன்று அவரை வழிமறித்ததாக அப்பெண் கூறியுள்ளார். “அது நள்ளிரவு நேரம். அந்த சமூக விரோதிகள் என் கைகளையும் கால்களையும் கட்டி, வாயையும் அடைத்த பிறகு, வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் என்னை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர்,” என்று அப்பெண் கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் கூர்மையான ஆயுதத்தால் அப்பெண்ணுக்குக் கடுமையான காயங்களையும் ஏற்படுத்தியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், தாக்குதல் நடந்துகொண்டிருந்தபோது அப்பெண்ணின் கணவருக்குத் தெரியாமல் இருப்பதற்காக, தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டை வெளியிலிருந்து பூட்டியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டிற்குள் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால், குடும்பத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக அவரைக் கவலைக்கிடமான நிலையில் அவர்கள் கண்டடைந்துள்ளனர். இதனையடுத்து அவர் ஜூன் 12 அன்று பெகுசராய் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதே நாளில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது. முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவர் ஜூன் 12 அன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும், உயிர் பிழைத்தவரின் கூற்றுப்படி, அவரது துன்பம் அத்துடன் முடிந்துவிடவில்லை. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகும், அவர் தொடர்ச்சியான கடுமையான வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்து, வலி ​​தாங்க முடியாத அளவுக்கு அதிகமானதால், அந்தப் பெண் புதன்கிழமை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அல்ட்ராசவுண்ட் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, மருத்துவர்கள் வியாழக்கிழமை அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளனர்.

அறுவை சிகிச்சையின் போது, ​​மருத்துவர்கள் அவரது அந்தரங்க உறுப்புகளில் இருந்து ஒரு தோட்டா, ஒரு கூழாங்கல் மற்றும் ஒரு மரத்துண்டு ஆகியவற்றை மீட்டெடுத்ததைக் கண்டு குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சூரஜ் குமார் , ராமு மாத்தோ, நிதீஷ் மாத்தோ மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார். "இருப்பினும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எவரையும் காவல்துறையால் கைது செய்ய முடியவில்லை," என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். வழக்கு குறித்த விவரங்களும், அதில் நடந்ததாகக் கூறப்படும் கொடூரச் செயல்களும் வெளிவந்ததை அடுத்து, மூத்த காவல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமையன்று மருத்துவமனையைப் பார்வையிட்டனர்.

பெகுசராய் சதர் எஸ்.டி.பி.ஓ-1 ஆனந்த் குமார் பாண்டே, தேடுதல் நடவடிக்கையின்போது தோட்டாக்கூடு மற்றும் பிற பொருட்கள் மீட்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். “தீவிர விசாரணை ஏற்கனவே நடைபெற்று வருகிறது, மேலும் இந்த வழக்கில் சந்தேக நபர்களைக் கைது செய்ய சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வழக்கு தொடர்பான மேலதிக தடயவியல் மற்றும் மருத்துவ அறிக்கைகளுக்காக காவல்துறை காத்திருக்கிறது,” என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு அப்பெண்ணை பாலியல் ரீதியாகத் தாக்க முயன்றதாகவும் அப்பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com