தாயைக் கொன்று மகனும் தற்கொலை செய்து கொண்ட கொடூரம்...

நோயால் அவதியடைந்த தாய்க்கு, விஷம் கொடுத்து விட்டு மகனும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தாயைக் கொன்று மகனும் தற்கொலை செய்து கொண்ட கொடூரம்...
Published on
Updated on
1 min read

ஈரோடு | கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள செல்லப்பா நகர் பகுதியில் சேர்ந்தவர் சம்பூரணம் தம்பதியினர். இவர்களுக்கு உதயகுமார் - நந்தகுமார் என்று இரு மகன்கள் உள்ளனர். சம்பூர்ணத்தின் கணவர் வேதாச்சலம் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் மூத்த மகன் உதயகுமார்க்கு திருமணமான நிலையில், திருமணமாகாத இளைய மகன் நந்தகுமார் உடன் செல்லப்பாநகர் பகுதியில் வசித்து வருகிறார். சம்பூர்ணத்திற்கு புற்றுநோய் தாக்கியதால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புற்றுநோயால் தாய் அவதிப்பட்டு வந்ததை கண்ட மகன் நந்தகுமார் மனம் உடைந்து நேற்று இரவு வீட்டில் இருக்கும் பொழுது தாய்க்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இருவரும் காலை வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்து, அருகில் இருந்தவர்கள் கோபிசெட்டிபாளையம் போலீசார் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு கோபிசெட்டிபாளைய சென்றனர்.

அப்போது, வீட்டில் தற்கொலை செய்து கொண்டு இறந்த கிடந்த தாய் சம்பவம் மகன் நந்தகுமார் ஆகியோரின் உடல்நிலை கைப்பற்றி கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஒரே நேரத்தில் தாய் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com