“கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர்” - நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்த மனைவி.. கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகம்!

மேலும் தொடர்ந்து கள்ளக்காதலை கைவிடுமாறு சரண்யாவை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது...
“கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர்” - நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்த மனைவி.. கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகம்!
Published on
Updated on
2 min read

சென்னை மாவட்டம், கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் 35 வயதுடைய மணிகண்டன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சரண்யா என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணமான நிலையில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். எனவே அடிக்கடி வெளியூருக்கு செல்வதால் அவ்வப்போது மட்டுமே வீட்டில் இருப்பார் என சொல்லப்படுகிறது. எனவே சரண்யா வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் சரண்யாவிற்கு பக்கத்து வீட்டில் குடும்பத்துடன் வசிக்கும் திவாகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த நான்கு வருடங்களாக சரண்யா அவருடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார். இதனை அக்கம் பக்கத்தினர் மூலம் அறிந்த மணிகண்டன் தனது மனைவியை கண்டித்திருக்கிறார்.

Admin

இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது. இருப்பினும் தொடர்ந்து சரண்யா திவாகரிடம் பழகி வந்த நிலையில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது மனைவியின் கள்ளத்தொடர்பு குறித்து உறவினர்களிடம் முறையிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் தொடர்ந்து கள்ளக்காதலை கைவிடுமாறு சரண்யாவை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மணிகண்டன் வழக்கம்போல சரண்யாவிடம் கள்ளக்காதலை கைவிட சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சரண்யா வீட்டில் இருந்த நைலான் கயிற்றை எடுத்து மணிகண்டன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அலறி துடித்து அக்கம் பக்கத்தினர் “எனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அவரை காப்பாற்ற கயிற்றை அறுத்து முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை” என நாடகமாடியுள்ளார்.

Admin

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் போலீசார் உயிரிழந்த மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் பிரேத பரிசோதனையின் முடிவில் மணிகண்டன் கொலை செய்யப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் மனைவியே கணவனை கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com