
பொள்ளாச்சி அருகே உள்ள கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கும் கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த 26 வயதான நந்தினி என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே இருந்துள்ளது. அதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் நந்தினி கோபத்தில் தனது தாய் வீடான கோவை சுந்தராபுரம் பகுதிக்கு சென்று தாய் வீட்டில் தங்கி இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கோபத்தில் வந்ததால் எந்த துணிகளையும் நந்தினி தனது தாய் வீட்டிற்கு எடுத்து செல்லாமல் இருந்துள்ளார். எனவே மனைவி நந்தினி தனது துணிகளை எடுப்பதற்காக கணவர் வீட்டிற்கு நேற்று தனது தாய் தங்கமணியுடன் வந்துள்ளார். அப்போது மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ரவி நந்தினியை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நந்தினியின் தாய் தங்கமணி ரவியை தட்டிக் கேட்டுள்ளார் அப்போது கோபமடைந்த ரவி அருகே இருந்த அரிவாளை எடுத்து மனைவியின் தாயான தனது மாமியாரை ஆக்ரோஷமாக வெட்டியுள்ளார். இதில் தங்கமணியின் கை துண்டாகி ரத்த வெள்ளத்தில் மித்துள்ளர்.
இதனை பார்த்து நந்தினி அலறி சத்தமிட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தங்கமணியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை அடுத்து தங்கமணி மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு தங்கமணிக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நந்தினியிடம் விசாரணை மேற்கொண்டு மாமியாரின் கை துண்டாக வெட்டியதால் ரவியை கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளனர். கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறு தட்டி கேட்ட மாமியாரை மருமகன் அரிவாளால் வெட்டி கை துண்டான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.