“திருமண ஆணுடன் பழகி வந்த இளம்பெண்” - முகத்தில் சரமாரியாக வெட்டப்பட்ட கொடூரம்.. கள்ளக்காதலால் நடந்த கொலையா?

பின்னர் திண்டுக்கல் பழைய கரூர் ரோடு சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே வெட்டு காயங்களுடன் மீனாட்சி...
“திருமண ஆணுடன் பழகி வந்த இளம்பெண்” -  முகத்தில் சரமாரியாக வெட்டப்பட்ட கொடூரம்.. கள்ளக்காதலால் நடந்த கொலையா?
Admin
Published on
Updated on
2 min read

திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இவரது முத்தமகளான 23 வயதுடைய மீனாட்சி அதே பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஒரு திருமணமான நபருடன் மீனாட்சிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து அறிந்த மீனாட்சியின் பெற்றோர் மகளின் வாழ்க்கையை நினைத்து கவலைடைந்ததுள்ளனர்.

எனவே மீனாட்சியை திருமணமான ஆணுடன் நெருங்கி பழக வேண்டாம் என கண்டித்தனர். மேலும் அந்த ஆண் நண்பரையும் கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து இருவரும் பழகி வந்த நிலையில் மீனாட்சியின் பெற்றோர் அவரை வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர். பெற்றோரின் பேச்சை கேட்காத அவர் தொடர்ந்து வேலைக்கு சென்று வந்த நிலையில் நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறி சென்ற மீனாட்சி இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார்.

இதனால் பயந்த பெற்றோர்கள் இரவு முழுவதும் மீனாட்சியை தேடி அழைந்துள்ளனர். பின்னர் திண்டுக்கல் பழைய கரூர் ரோடு சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே வெட்டு காயங்களுடன் மீனாட்சி இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீனாட்சியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Admin

மேலும் நடந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் மீனாட்சியின் கொலைக்கு யார் காரணம்? என்ன நடந்தது? மீனாட்சி எப்படி ரயில்வே மேம்பாலத்திற்கு வந்தார் என விசாரணை மேற்கொண்ட நிலையில் முதற்கட்ட விசாரணையில், மீனாட்சி பழக்கம் வைத்திருந்த நபர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. எனவே இருவரை திண்டுக்கல் தாலுகா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலைக்கு சென்ற முகத்தில் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com