மருமகனை கொலை செய்த மாமனார்” - பக்கா பிளான் போட்டு ஐந்து மாதங்கள் காத்திருந்த தந்தை.. கேள்விக்குறியான மகளின் வாழ்க்கை!

ஆர்த்தி வீட்டில் ஏற்றுக்கொள்ளாத நிலையில் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த..
மருமகனை கொலை செய்த மாமனார்” - பக்கா பிளான் போட்டு ஐந்து மாதங்கள் காத்திருந்த தந்தை.. கேள்விக்குறியான மகளின் வாழ்க்கை!
Published on
Updated on
2 min read

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த ராமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 24 வயதுடைய ராமச்சந்திரன். இவர் பால் கரவை தொழில் செய்து வருகிறார். வழக்கம் போல கணபதிபட்டி கிராமத்தில் பால் கறவைக்கு சென்ற இடத்தில் சந்திரன் என்பவரின் மகள் ஆர்த்தி என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்களின் காதலை ஆர்த்தி வீட்டில் ஏற்றுக்கொள்ளாத நிலையில் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த ஜூன் மாதம் இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் ராமச்சந்திரன் மீது சந்திரன் குடும்பத்தினர் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். திருமணமாகி ஐந்து மாதங்கள் கடந்ததால் பிரச்சனை இன்றி காதல் தம்பதிகள் சந்தோஷமாக இருந்து வந்தனர். இந்நிலையில் வழக்கம் போல் குளிப்பட்டி கிராமத்திற்கு பால் கறவைக்கு ராமச்சந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்டாத்து அய்யம்பாளையம் கிராமத்தை அடுத்து பெரியார் பாசன கால்வாய் பாலத்தில் ராமச்சந்திரன் சென்று கொண்டிருந்தபோது சந்திரன் அவரை வழிமறித்தார்.

Admin

மேலும் சந்திரன் கண்ணிமைக்கும் நேரத்தில் ராமச்சந்திரனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் கை துண்டான நிலையில் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்து பாலத்திலேயே சரிந்த சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ராமச்சந்திரனின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சந்திரபிரபா ஆகியோர் உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து மருமகனை படுகொலை செய்த மாமனார் சந்திரனை போலீசார் கைது செய்தனர். கொலை சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரதீப் ஆய்வு மேற்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காதல் திருமண தகராறில் ஐந்து மாதங்கள் காத்திருந்து நடத்தப்பட்ட படுகொலை தொடர்பாக நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் வேறு சிலருக்கு தொடர்பு உள்ளதா? என தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com