மகளை அரிவாளால் வெட்டி தூக்கிட்டு தற்கொலை செய்த தந்தை...

திருச்சியில் மகளை அரிவாளால் வெட்டி, தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகளை அரிவாளால் வெட்டி தூக்கிட்டு தற்கொலை செய்த தந்தை...
Published on
Updated on
1 min read

திருச்சியில் மகளை அரிவாளால் வெட்டி, தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம் சக்திநகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு மனைவி லதா, மகள் கீர்த்தனா மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்தநிலையில், நேற்று மாலை வீட்டில் தந்தை- மகள் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி, அரிவாளால் மகளை சரமாரியாக கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டியுள்ளார். மேலும் ஆத்திரம் தாளாத அவர், வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் படுகாயமுற்ற கீர்த்தனாவுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மூர்த்தி உடலை கைப்பற்றியுள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

இந்திலையில் கொலை முயற்சிக்கான காரணம் என்ன, மூர்த்தி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com