ஒரு காலத்தில் தாயாகக் கருதிய வீடற்ற மாணவனை, தனது புளோரிடா வீட்டிற்கு அழைத்து வந்து அம்மாணவனுக்கு அளவுக்கு அதிகமாக மது அருந்தக் கொடுத்த பிறகு, ஆசிரியை ஒருவர் அவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சான்ஃபோர்டில் உள்ள க்ரூம்ஸ் அகாடமியில் ஆசிரியராகப் பணியாற்றிய 49 வயதான மெக்கன்சி மெக்லீன், மார்ச் 2024-ல் தனது 18 வயது மாணவன் வீடற்ற நிலையில் இருந்துள்ளார். இதனால் மெக்லின் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துவந்துள்ளார். தன்னுடன் குடியேறிய பிறகு, அந்த மாணவரை இரண்டு மாத காலத்திற்குள் "ஐந்து முதல் பத்து முறை" உட்பட பலமுறை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த மாணவன் வீட்டிற்கு வந்த சில நாட்களிலேயே, தன் மகளுடன் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது, மெக்லின் அவனுக்கு 12 ஷாட் ஜின்னை ஊற்றிக் கொடுத்ததாகக் கைது ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. கடுமையாக போதையில் இருந்தவுடன், அந்த மாணவனுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். ஒன்பது மாதங்களாக மெக்லினுடன் வசித்து வந்த மாணவன், மெக்லீனைத் தன்னைவிட்டுத் தொடர்ந்து தள்ளிவிட்டதாகவும், அது "தவறு" என்று அவரிடம் கூறியதாகவும் காவல்துறையிடம் தெரிவித்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குற்றம் சாட்டின. அந்த மாணவன் பட்டம் பெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, அந்த இருவரும் ஒரே படுக்கையில் உறங்கியதாகவும், ஒன்றாகவே பள்ளிக்கு காரில் சென்றதாகவும் அப்பகுதில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.
ஆரம்பத்தில் மெக்லீனை ஒரு தாய் ஸ்தானத்தில் கருதிய அந்த பதின்வயது சிறுவன், அந்தத் துன்புறுத்தலைச் சகித்துக்கொள்ளத் தான் "கட்டாயப்படுத்தப்பட்டதாக" உணர்ந்ததாகவும், இல்லையெனில் தனக்கு "வாழ்வதற்கு இடமோ, உண்பதற்கு உணவோ இருக்காது" என்ற நிலை ஏற்பட்டதாகவும் காவல்துறையிடம் வேதனையுடன் கூறியதாக, காவல்துறை பதிவுகள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து, 2024 டிசம்பரில் அந்த மாணவன் வீட்டை விட்டு வெளியேறியபோது, மெக்லின் ஆத்திரத்தில் கத்தியவாறு தன்னைத்தானே கீறிக்கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். செமினோல் கவுண்டி பொதுப் பள்ளிகளில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த மெக்லீன், கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நிர்வாக விடுப்பில் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"எங்கள் ஊழியர்கள் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் ஏதேனும் இருந்தால், அவை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு விரைவாகக் கையாளப்படும்," என்று பள்ளி நிர்வாகம் அந்த ஊடகத்திற்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. எங்கள் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பே எங்களது தலையாய முன்னுரிமையாகும். அந்தப் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் எந்தவிதமான நடத்தையும் செமினோல் கவுண்டி பொதுப் பள்ளிகளில் பொறுத்துக்கொள்ளப்படாது. சிறை ஆவணங்களின்படி, மெக்லீன் மீது அதிகாரப் பதவியில் இருந்துகொண்டு பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக இரண்டு குற்றச்சாட்டுகளும், கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளை விநியோகித்ததாக ஒரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.